முகப்பு
வணிகம்

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

ஜூலை 1 முதல் சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

Updated On : 25 ஜூன் 2026, 12:45 pm IST
சிலிண்டர் முன்பதிவு
பகிர்:

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல்களுக்குப் பிறகு, இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் முன்பதிவு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த மூன்று மாதங்களில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு செய்வது தொடர்பான பல புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சில, எரிபொருள் நிறுவனங்கள், சிலிண்டருக்கு முன்பதிவு இடைவெளியை 25 நாள்கள் மற்றும் 45 நாள்களாக நிர்ணயித்திருந்தன.

Advertisement

Advertisement

மேலும், நாட்டில் உள்ள 'ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு இணைப்பு' (அதாவது 'இரட்டை இணைப்பு கூடாது') என்ற கொள்கையை வலியுறுத்தப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட விதிமுறையில், இண்டேன் (Indane), ஹெச்பி (HP) அல்லது பாரத் (Bharat) ஆகிய நிறுவனங்களில் எதில் எரிவாயு இணைப்பு பெற்றிருந்தாலும், இந்திய வீட்டு உபயோக வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி (LPG) இணைப்பை ரத்து செய்வதற்கு அரசு 30 நாள் கால அவகாசத்தை வழங்குகிறது.

தற்போது வீட்டுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு இணைப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள் நுகர்வோர் தங்கள் எரிவாயு சிலிண்டர் இணைப்பை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம் என்று அந்த விதி கூறுகிறது.

உதாரணமாக, ஜூன் 23 அன்று எரிவாயு குழாய் மூலம் இணைப்பைப் பெற்றால், சிலிண்டர் இணைப்பை ரத்து செய்வதற்குசரியாக 30 நாட்கள் அவகாசம் இருக்கும். இந்த உதாரணத்தின்படி, அதற்கான காலக்கெடு ஜூலை 23 ஆகும்.

summary

Changes to cylinder booking coming from July 1st! Is it good news?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments