மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தல்
மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சிஐடியூ தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சிஐடியூ தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
அமைப்பின் மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் திட்ட 21ஆவது மாநாடு பாளையங்கோட்டையில் மகாராஜநகரில் உள்ள அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அந்தோணி கிளமென்ட் தலைமை வகித்தார். அமைப்பின் திருநெல்வேலி மண்டலச் செயலர் எம். பீர்முகம்மது தொடங்கிவைத்தார். செயலர் கணேசன் அறிக்கை வாசித்தார். மாநிலச் செயலர் எஸ். வண்ணமுத்து, முன்னாள் செயலர் ஏ. கிருஷ்ணன், திட்டப் பொருளாளர் சங்கர், ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலர் எஸ். ராஜாமணி, முன்னாள் தலைவர் எஸ். பூலுடையார், கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தலைவர் டி. கந்தசாமி ஆகியோர் பேசினர்.
தீர்மானங்கள்: மின்வாரியத்தை பிரிக்காமல் தொடர்ந்து பொதுத் துறையாக செயல்படுத்த வேண்டும்; மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; மின்வாரியத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும்; ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; துணை மின் நிலையங்களில் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எம்.கே. மாடசாமி, செயலராக பெ. கணேசன், பொருளாளராக கே. ஐயப்பன், துணைத் தலைவர்கள், துணைச் செயலர்கள் உள்பட 19 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பொருளாளர் அசோக் வரவேற்றார். துணைத் தலைவர் வை. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.