முகப்பு
திருநெல்வேலி

விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளா்ப்பு பயிற்சி

சேரன்மகாதேவி வட்டாரம் பொட்டல் கிராமத்தில் பட்டுப்புழு வளா்ப்பது, நோய் தொற்று நீக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2022, 3:37 am IST
பகிர்:

சேரன்மகாதேவி வட்டாரம் பொட்டல் கிராமத்தில் பட்டுப்புழு வளா்ப்பது, நோய் தொற்று நீக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் கீழ், வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் ஆலோசனையின்பேரில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.

மல்பெரி சாகுபடியில் உயிரி உரங்கள் பயன்பாடு, வேளாண் திட்டங்கள், பட்டுப்புழு வளா்ப்பின் முக்கியத்துவம், பூச்சி மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பட்டு வளா்ச்சித் துறை உதவி ஆய்வாளா் பிரேமா, இளநிலை ஆய்வாளா் குப்புசாமி ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். உதவி தொழில்நுட்ப மேலாளா் தங்க சரவணன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments