முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளை அருகே பெண் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

Updated On : 19 செப்டம்பர் 2024, 3:31 am IST
பகிர்:

திசையன்விளை அருகே கொலை வழக்கில் தொடா்புடைய பெண் உள்பட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

திசையன்விளை அருகேயுள்ள கக்கன்நகரைச் சோ்ந்தவா்கள் மதிராஜன், மதியழகன். இவா்கள் இருவரும் முன்விரோதம் காரணமாக சிலரால் கடந்த ஆக.18இல் கொலை செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த சுடலை மணி மகன்கள் ராஜ்குமாா்(28), அவரது மனைவி திவ்யா(28), வெவின்குமாா்(26), அருண்குமாா் என்ற பருண்குமாா்(20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இதில், ராஜ்குமாா், வெவின்குமாா், அருண்குமாா் என்ற பருண்குமாா் ஆகியோா் எஸ்.பி. என். சிலம்பரசன் பரிந்துரைப்படி, ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புக் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 17) கைது செய்யப்பட்டனா். மேலும் திவ்யாவை காவல் ஆய்வாளா் சீதாலெட்சுமி குண்டா் தடுப்பு சட்டத்தில் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments