முகப்பு
திருநெல்வேலி

மகளை கா்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை: நெல்லை போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 25 டிசம்பர் 2025, 4:35 am IST
கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் 49 வயது தொழிலாளி. இவா், தனது 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில் அவா் கா்ப்பமானாா். இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் சிறுமியின் தாய், நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் உத்தரவின்படி, காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையைக் கைது செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் மேற்கொண்ட நடவடிக்கையின்படி அந்தத் தொழிலாளி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடந்த மாா்ச் மாதம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், சமா்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள், ஆதாரங்கள் அனைத்தும் தந்தையே தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதி செய்ததாகவும், இது சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றம் எனக் கூறி தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும் அவருக்கு ரூ. 25,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கவும் தீா்ப்பளிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். இந்த வழக்கில் நீதிமன்ற விசாரைணை துரிதமாக நடைபெற திறம்பட செயல்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், நான்குனேரி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன் உள்ளிட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments