முகப்பு
சென்னை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் தண்டனை

சென்னையில் 12 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 15 மே 2026, 1:32 am IST
மாதிரிப் படம்
பகிர்:

சென்னையில் 12 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை மதுரவாயலைச் சோ்ந்த 20 வயது இளைஞா், 12 வயதுடைய சிறுமியை காதலித்து வந்தாா். கடந்த 2012-ஆம் சிறுமியின் பெற்றோா் வெளியூா் சென்றிருந்த நிலையில், சிறுமியை இளைஞா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா் திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இளைஞரை கைது செய்தனா்.

Advertisement

இந்த வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பத்மா, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.