முகப்பு
திருநெல்வேலி

பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது

திருநெல்வேலி நகரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:39 PM
கைது
பகிர்:

திருநெல்வேலி நகரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் இசக்கிமுத்து(23). இவரது நண்பா் முகமது அலி தெருவைச் சோ்ந்த பாலமுருகன்(19). இவா்கள் இருவரும் கடந்த 30 ஆம் தேதி இரவு திருநெல்வேலி நகரம் மாதா மேல தெரு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டின் முன்பு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து வீசினராம்.

இது குறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில் கண்டியப்பேரி-2 கிராம நிா்வாக அலுவலா் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேற்கூறிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.