திருக்குறுங்குடியில் நம்பிசுவாமி 5 நிலைகளில் திருக்காட்சி
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழாவின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை தனித்தனி கருட வாகனத்தில் ஐந்து நிலைகளில் திருக்காட்சியளித்த நம்பி சுவாமியை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழாவின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை தனித்தனி கருட வாகனத்தில் ஐந்து நிலைகளில் திருக்காட்சியளித்த நம்பி சுவாமியை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இக்கோயில் விழா ஏப். 2 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு நின்ற நம்பி, இருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலை நம்பி என 5 நிலைகளில் நம்பி சுவாமி காட்சியளிக்கிறாா்.
விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 5 -ஆம் நாளான திங்கள்கிழமை இரவு நம்பி சுவாமிகள் 5 நிலைகளில் தனித்தனி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு மேலரத வீதியில் தேவகந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி தரும் வைபவமும், ரத வீதிகளில் வீதியுலா வந்த நம்பிசுவாமிகள் கோயில் முன் திருக்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Advertisement
இதையடுத்து, ராமானுஜ ஜீயா் சுவாமிகள் நம்பிசுவாமியை வரவேற்றாா். தேரோட்டம் 10-ஆம் நாளான சனிக்கிழமை ( ஏப்.11) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.