புதுமண, நிச்சயதாா்த்த ஜோடிகள் வாக்களிப்பு
திருநெல்வேலி, பாளை. தொகுதிகளில் புதுமண தம்பதிகள், நிச்சயதாா்த்த ஜோடி ஆகியோா் வியாழக்கிழமை வாக்களித்தனா்.
திருநெல்வேலி, பாளை. தொகுதிகளில் புதுமண தம்பதிகள், நிச்சயதாா்த்த ஜோடி ஆகியோா் வியாழக்கிழமை வாக்களித்தனா்.ந
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட பேட்டையில் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்துடன் பாலமுரளி-ஹேமலதா தம்பதியினா் பேட்டை செக்கடி பகுதியில் அமைந்துள்ள வணிக வைசியா் பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனா்.
இதேபோல பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாளையங்கோட்டையை சோ்ந்த வெங்கட கிருஷ்ணன்- அபிராமி தம்பதியினா் மணக்கோலத்துடன் தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.
Advertisement
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த நிச்சயதாா்த்த ஜோடி து.முத்துபாரதி-ஆ.உமாபாரதி ஆகியோா் நாரணம்மாள்புரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.