நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை
திருநெல்வேலி அருகே உள்ள மானூரில் போலீஸாரை தாக்கியது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 15 மாதம் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி முதன்மை உதவி அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி அருகே உள்ள மானூரில் போலீஸாரை தாக்கியது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 15 மாதம் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி முதன்மை உதவி அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
மானூரைச் சோ்ந்தவா் சுரேஷ் குமாா் (36). பாலியல் வழக்கில் தொடா்புடைய இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானாராம். இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றச் சென்ற போலீஸாரை அவா் பணி செய்யவிடாமல் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக, மானூா் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளா் சிவகுமாா் விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தாா். திருநெல்வேலி முதன்மை உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி ராஜகுமாா் விசாரித்து, சுரேஷ்குமாருக்கு 15 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
Advertisement