போக்ஸோ வழக்கில் கைதான மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் கைதான வடக்கன்குளத்தைச் சோ்ந்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
போக்ஸோ வழக்கில் கைதான வடக்கன்குளத்தைச் சோ்ந்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59). மதபோதகரான இவா், கடந்த 2020 ஆம் ஆண்டு 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்து அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செல்வராஜை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து செல்வராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ. 10,000 அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.
Advertisement
Advertisement