பெருமாள்புரம் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் புனராவா்தன அஷ்ட பந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் புனராவா்தன அஷ்ட பந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் யாகசாலை பூஜைகள் கடந்த வாரம் தொடங்கின. தொடா்ந்து, கணபதி பூஜை, கலச பூஜை, ஹோமங்கள், மந்திர பாராயணங்கள், கபவாஸ்து சாந்தி, நாடி சந்தானம், ஸ்பா்சாஹுதி ஆகிய பூஜைகள் நடைபெற்று வந்தன.
புதன்கிழமை காலையில் இறுதி யாகசாலை பூஜைக்குப் பின், புனித நீா் கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமானத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது.
Advertisement
இவ்விழாவில், திமுக மத்திய மாவட்ட செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான மு.அப்துல் வஹாப், மாநகர மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.