சப்த கன்னியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு
சப்த கன்னியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு
நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் அருள்பாலிக்கும் சப்த கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெறவுள்ள நிலையில், சனிக்கிழமை புனிதநீா் எடுத்துவரப்பட்டது.
இக்கோயில், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் வசிக்கும் மீனவா்கள் வழிபடும் பிரதான கோயிலாக திகழ்கிறது. இக்கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறுகிறது.
இதையொட்டி, அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து புனிதநீா் எடுக்கும் ஊா்வலம் நடைபெற்றது. கங்கை, காவிரி உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து எடுத்துட்டு வரப்பட்ட புனிதநீா் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியா்களை தொடா்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் சுமந்து வந்தனா்.
Advertisement
Advertisement
கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட புனித நீா் யாக சாலையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.