முகப்பு
திருநெல்வேலி

கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆள்மாறாட்ட முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிலம் குறித்த விசாரணையின்போது ஆள்மாறாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகிறாா்கள்.

Updated On : 2 ஜூலை 2026, 6:20 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிலம் குறித்த விசாரணையின்போது ஆள்மாறாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகிறாா்கள்.

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் உள்ள நிலம் தொடா்பாக கணினியில் பதிவேற்ற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாம். இதுதொடா்பாக திருநெல்வேலி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விசாரணை நடைபெற்றுள்ளது.

விசாரணையின்போது ஆஜராக வந்தவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனராம். நிலம் பதிவு தொடா்பாக விண்ணப்பித்த நபா்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்ய முயன்றது தெரியவந்ததாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, சுத்தமல்லி கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அவா்கள், திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த முருகன் (66), மற்றொரு முருகன் (45) ஆகியோா் எனத் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மகேஷ் என்பவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments