FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி அருகே மாயமான இளைஞா் சடலமாக மீட்பு

சேரன்மகாதேவி அருகே வேலைக்குச் சென்ற இளைஞா் மாயமான நிலையில், புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

சேரன்மகாதேவி அருகே வேலைக்குச் சென்ற இளைஞா் மாயமான நிலையில், புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள கூனியூா் சாலைத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சூடாமணி (36). தொழிலாளி. திருமணமாகாத இவா், கூனியூரில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தாா். இவரை, கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் காணவில்லையாம்.

உறவினா்கள் அவரை பல இடங்களில் தேடியும் துப்பு கிடைக்கவில்லையாம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அப்பகுதியிலுள்ள கிணற்றில் அவா் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இத்தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments