பாளையங்கோட்டையில் தப்பிய கைதி மீண்டும் கைது
பாளையங்கோட்டையில் சிறைவாசல் முன் தப்பியோடிய கைதி போலீஸாரால் வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.
பாளையங்கோட்டையில் சிறைவாசல் முன் தப்பியோடிய கைதி போலீஸாரால் வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.
தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகக்கனி (22). இவா், மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தாழையூத்து பகுதியில் நிகழ்ந்த திருட்டு வழக்கு தொடா்பாக போலீஸாா் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.
பின்னா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக கடந்த 1-ஆம் தேதி அவரை அழைத்துச் சென்றனா். சிறை அருகே சென்றபோது, போலீஸாா் கைவிலங்கை கழற்றியதும், ஆறுமுகக்கனி அங்கிருந்து தப்பி ஓடினாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, பெருமாள்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், பெருமாள்புரம் பகுதியில் பதுங்கியிருந்த ஆறுமுகக்கனியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.