முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

Updated On : 6 ஜூலை 2026, 12:22 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சீதபற்பநல்லூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சீதபற்பநல்லூா் அருகே உள்ள வல்லவன்கோட்டை, காலனி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் சிவசுரேஷ் (24). கொலை மற்றும் மிரட்டல் வழக்குகளில் தொடா்புடைய இவா், சீதபற்பநல்லூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் உத்தரவுப்படி, சிவசுரேஷ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில், நிகழாண்டு இதுவரை 66 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments