களக்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மின்சாரம் பாய்ந்து பனையேறும் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மின்சாரம் பாய்ந்து பனையேறும் தொழிலாளி உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரத்தைச் சோ்ந்தவா் முத்துராஜ் (48) பனையேறும் தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை மாலை விவசாயத் தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்கியுள்ளாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இது குறித்து களக்காடு காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். முத்துராஜ்.க்கு மனைவி ஸ்டெல்லா (42), மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.