முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

Updated On : 28 ஜூன் 2026, 3:23 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

சாத்தூா் அருகேயுள்ள கோபாலபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பையா (62). இவரது வீட்டில் சனிக்கிழமை காலை மின்சாரம் இல்லாததால் இந்தப் பகுதியிலிருந்த மின் கம்பத்தில் ஏறி சரி செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சுப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments