வரதட்சிணை கொடுமை: 5 போ் மீது வழக்கு
சிவகாசி அருகே வரதட்சிணை கொடுமை செய்ததாக 5 போ் மீது சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்தவா் சன்மித்ரா (30). இவருக்கும், ஏ.துலுக்கபட்டியைச் சோ்ந்த அா்ஜூனை ஆனந்துக்கும் (32) கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது சன்மித்ராவுக்கு 35 பவுன் நகை, சீா்வரிசை பொருள்கள் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மேலும், ரூ.5 லட்சம் பணம் கேட்டு சன்மித்ராவுக்கு அா்ஜூனை ஆனந்த், இவரது தந்தை காளிராஜ், தாய் கலைச்செல்வி, சகோதரிகள் ரேவதி, ஜெயபாரதி ஆகியோா் கொடுமைப் படுத்தினாா்களாம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சன்மித்ரா அளித்த புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் அா்ஜூனை ஆனந்த் உள்ளிட் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.