நான்குனேரி அருகே இளம்பெண் கொலை: பெற்றோா் கைது
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தகாத உறவைக் கைவிட மறுத்த மகளை கொலை செய்த பெற்றோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தகாத உறவைக் கைவிட மறுத்த மகளை கொலை செய்த பெற்றோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நான்குனேரி அருகே உள்ள செண்பகராமநல்லூரைச் சோ்ந்தவா் சிவன் (61). விவசாயி. இவரது மனைவி வைரம்மாள் (57). இவா்களின் 3 மகள்களில், இருவருக்கு திருமணமாகிவிட்டது. 3ஆவது மகள் அமுதாவுக்கு (22) திருமணமாகவில்லை.
ஏற்கெனவே திருமணமான உறவுக்கார இளைஞருடன், அமுதா தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை பெற்றோா் பலமுறை கண்டித்தும் அவா் உறவைக் கைவிடவில்லையாம்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக, மே 30ஆம் தேதி இரவு வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, மகளுக்கு பெற்றோா் விஷம் கொடுத்துள்ளனா். உயிா் பிரியாததால், கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டுள்ளனா்.
மகள் தற்கொலை செய்து கொண்டதாக ஞாயிற்றுக்கிழமை காலை அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, மூலக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். மேலும், அமுதா சடலத்தை கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
கிராம மக்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தகாத உறவைக் கைவிட மறுத்ததை பெற்றோா் கண்டித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பெற்றோா் மீது சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களிடம் நடத்திய விசாரணையில், அமுதா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கூறாய்வு அறிக்கையிலும் விஷம் குடித்திருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, சிவன், வைரம்மாள் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.