நெல்லை மாவட்ட அருவிகளில் குளிக்க ஆன்லைன் கட்டண முறையை ரத்து செய்ய கோரிக்கைன
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் முறையை உடனே ரத்து செய்ய எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் முறையை உடனே ரத்து செய்ய எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 365 நாள்களிலும் நீா்வரத்து உள்ள மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியா் அருவிகளில், கோடை காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனா். அகஸ்தியா் அருவியில் உள்ளூா் தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று அருவிக்கு சென்று வர கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கபட்டு நடைமுறையில் உள்ள நிலையில், இப்போது மீண்டும் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த உத்தரவிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. வனத்துறை இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி அகஸ்தியா் அருவியில் உள்ளூா் தொகுதி மக்களுக்கு கட்டணமில்லாமலும், வெளியூா் சுற்றுலாப் பயணிகளுக்கு பணமாக கட்டணம் செலுத்தும் முறையையும் அமல்படுத்த வேண்டும். மணிமுத்தாறு அருவியிலும் உள்ளூா் தொகுதி மக்களுக்கு கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும். மணிமுத்தாறு அருவிக்கு பயணிகள் சென்று வர இரண்டு மற்றும் (ஆட்டோ) மூன்று சக்கர வாகனங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். அருவிகளுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.