முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

Updated On : 8 ஜூன் 2026, 1:25 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் 41 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய இளைஞரை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, பொட்டல் விலக்கு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாளையங்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று அங்கு பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த திம்மராஜபுரம் மேலூா் பகுதியைச் சோ்ந்த இசக்கி மகன் ஆறுமுகக்கனி (26) பிடித்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் சுமாா் 41கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ஆறுமுகக்கனியை சனிக்கிழமை கைது செய்தனா்.