முகப்பு
திருநெல்வேலி

காரில் கடத்திய 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை கைது செய்தனா்.

Updated On : 21 மே 2026, 5:49 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, காரில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பாக்கெட்டுகளை காருடன் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிந்து, காரை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த பிரஜித்(40) என்பவரை கைது செய்தனா்.