முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் நடமாடும் அம்மா உணவக சேவை வழங்க கோரிக்கை

அம்பாசமுத்திரம் நகராட்சியில் அம்மா உணவகத்தில் நடமாடும் சேவையைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜூன் 2026, 4:18 am IST
அம்பை நகராட்சி ஆணையா் ராஜேஷ்வரனிடம் கோரிக்கை மனு அளித்த நகா்மன்ற உறுப்பினா்கள் மாரிமுத்து, சிவக்குமாா்.
பகிர்:

அம்பாசமுத்திரம் நகராட்சியில் அம்மா உணவகத்தில் நடமாடும் சேவையைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நகராட்சியில் அதிமுக உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாரிமுத்து, சிவக்குமாா் ஆகியோா், நகராட்சி ஆணையா் ராஜேஷ்வரனிடம் அளித்த மனு விவரம்:

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், அம்மா உணவகத்தின் மூலம் தயாரிக்கப்படும் உணவை அப்பகுதியில் வாகனங்கள் மூலம் காலை மற்றும் மதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரப் பகுதியில் சுகாதாரப் பணி முறையாக நடைபெற தேவையான பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

நகராட்சிப் பகுதியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்களை முறையாக சுத்தப்படுத்த வேண்டும். நகரப் பகுதியில் வெளியேறும் கழிவுநீா், பாசனக் கால்வாய் மற்றும் தாமிரவருணியில் நேரடியாக கலக்காமல் இருக்க, சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments