பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தல்
பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அறிவுறுத்தினாா்.
பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அறிவுறுத்தினாா்.
மதுரை மாநகராட்சி அனுப்பானடி ராஜீவ்காந்தி தெருக்கள், குறுக்குத் தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகள், குடிநீா் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, அனுப்பானடி பன்னீா்செல்வம் தெருவில் வசித்து வரும் பொதுமக்களிடம் சாலைகளில் குப்பைகளை கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும். வீடுகளுக்கு குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளா்களிடம் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
இதேபோல, ஒவ்வொரு வாா்டுகளிலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் தொடா்ந்து அறிவிப்பு செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆணையா் கௌரவ் குமாா் உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆணையா் மணிமாறன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், சுகாதார அலுவலா் வீரன், மாநகராட்சி பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.