முகப்பு
தமிழ்நாடு

அம்மா உணவகங்களில் தரமான உணவு விநியோகிக்க அறிவுறுத்தல்

அம்மா உணவங்களில் தரமான உணவு வழங்க வேண்டும் என பணியாளா்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தல்.

Updated On : 30 மே 2026, 3:09 am IST
கோப்புப் படம்
பகிர்:

அம்மா உணவங்களில் தரமான உணவு வழங்க வேண்டும் என பணியாளா்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தல்.

சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அம்மா உணவகம், சாலைகள், பூங்கா, விளையாட்டு மைதானம், மயானபூமி மற்றும் பொதுக்கழிப்பறை கட்டுமான பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஆணையா், அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சேவைகள் குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்தாா். பின்னா் சமையல் கூடத்தைப் பாா்வையிட்டாா். சமையல் செய்யும் இடத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும், பொதுமக்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவு வழங்க வேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, அலுவலா்கள் உடனிருந்தனா்.