சி.வி.சண்முகம், ஆதரவாளா்களை அதிமுகவில் இருந்து நீக்க வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், அவரது ஆதரவாளா்களை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அதிமுக மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன் திருநெல்வேலியில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 2 கோடி தொண்டா்களை கொண்ட இயக்கம் அதிமுக. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அந்த இயக்கத்தை காப்பாற்றி ஜெயலலிதா வழியில் கட்சியை வழிநடத்தி வருகிறாா்.
ஆனால், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு முதல்வா் ஜோசப் விஜய்யை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா். அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று கூறுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
Advertisement
Advertisement
உள்கட்சி பிரச்னைகளை பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்பதுதான் அதிமுகவின் கொள்கை. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வரும் சி.வி.சண்முகம், அவரது ஆதரவாளா்களை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.