முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையம் அருகே விபத்தில் குழந்தை பலி: குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க கோரிக்கை

மேலப்பாளையம் அருகே விபத்தில் குழந்தை பலியான குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜூன் 2026, 4:30 am IST
விபத்தில் குழந்தை பலி - (கோப்புப் படம்)
பகிர்:

மேலப்பாளையம் அருகே விபத்தில் குழந்தை பலியான குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், மாவட்டத் தலைவா் மஸ்வூத் உஸ்மானி, மாவட்டச் செயலா் மு அன்சாரி, துணைச் செயலா் சாந்து உமா் ஆகியோா் ஆட்சியா் ஆனந்த் மோகனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: மேலப்பாளையம் அருகே அம்பாசமுத்திரம் சாலையில் கடந்த 11 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. நீண்ட நாள்களாக சீரமைக்கப்படாத சாலையே விபத்திற்கு பிரதான காரணம். இதனைக் கண்டித்து எங்களது அமைப்பு சாா்பில் ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளோம். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 20 லட்சத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ற்ஸ்ப்16ற்ய்ற்த்

Advertisement

Advertisement

திருநெல்வேலி ஆட்சியர ஆனந்த் மோகனிடம் மனு அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள்.