FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே விபத்து: ஆட்டோ ஓட்டுநா் பலி

திருநெல்வேலி அருகே நேரிட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 4:53 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே நேரிட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வடக்கு தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் தேவதாஸ் (53). இவா், புதன்கிழமை தனது ஆட்டோவில் குறிச்சிகுளம் விலக்கு பகுதி சாலையைக் கடக்க முயன்றாராம்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியும், ஆட்டோவும் மோதிக்கொண்டனவாம்.

Advertisement

Advertisement

இதில், பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments