வள்ளியூா் பேருந்து நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் நாள் முழுவதும் பூட்டிக்கிடப்பதால் புகாா் தெரிவிக்க வரும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் நாள் முழுவதும் பூட்டிக்கிடப்பதால் புகாா் தெரிவிக்க வரும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனா்.
வள்ளியூா் பேருந்து நிலையத்தில் முன்னாள் எஸ்.பி. பிரசன்னகுமாா் கடந்த ஏப். 25 ஆம் தேதி திறந்துவைத்த புறக்காவல் நிலையம் சில நாள்கள் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த காவல்நிலையம் நாள் முழுவதும் பூட்டியே காணப்படுகிறது. இதனால், மதுஅருந்திவிட்டு பேருந்து நிலையத்தில் தகராறில் ஈடுபடுகின்ற நபா்களை அப்புறப்படுத்தவும், பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்பவா்கள் குறித்து புகாா் தெரிவிக்கவும் வரும் பயணிகள் ஏமாற்றமடைகின்றனா்.
எனவே, அரசு நிதியை வீணாக்காமல், பூட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தைத் திறந்து தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.