நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் முற்றுகை
திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சுமாா் 95 ஊழியா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் அனைவரும் மாவட்ட கருவூலம் மூலமாகவே தங்களது ஊதியத்தைப் பெற்று வந்துள்ளனா்.
இவா்களை, புதிய ஒப்பந்த நிறுவனத்துடன் இணைக்க நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதைக் கண்டித்து ஊழியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா். மாவட்ட நிா்வாகம் எங்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.