மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மேற்கு தொடா்ச்சி மலை வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மற்றும் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலை வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மற்றும் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
தற்போது கோடை விடுமுறை என்பதாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குவியத் தொடங்கினா்.
முன்னதாக, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு வனச் சோதனைச்சாவடிகளில் பயணிகளின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு நெகிழிப் பொருள்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னா், அருவிப் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகள் குழந்தைகள், குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.