பண்ணைவிளை பள்ளி அருகே வேகத்தடை அமைக்கக் கோரிக்கை
பண்ணைவிளை மேல்நிலைப் பள்ளி அருகே இருபுறமும் தொடர் வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ணைவிளை மேல்நிலைப் பள்ளி அருகே இருபுறமும் தொடர் வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருங்குளம் அருகே உள்ள பண்ணைவிளை பங்களாவில் அமைந்துள்ள தக்கர் மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியின் இருபுறமும் சாலைகள் வளைந்து இருப்பதால் வாகனங்கள் வருவது தெரியாமல் மாணவ, மாணவியர் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், பள்ளியில் இருந்து பண்ணைவிளைக்கு செல்லும் வழியில் எஸ் வடிவிலான அபாய வளைவு உள்ளது. இதிலும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது.
Advertisement
இது குறித்து பலமுறை நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் அளித்தும், தற்பொழுது வரை வேகத்தடை அமைக்கப்படவில்லை.
எனவே விபத்தினால் உயிரிழப்பு ஏற்படும் முன், பண்ணைவிளை மேல்நிலைப் பள்ளியின் இருபுறமும் தொடர் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.