திருக்குறள் போட்டி: திருச்செந்தூர் பள்ளி மாணவி மாநிலத்தில் 3ஆவது இடம்
திருக்குறள் போட்டியில் திருச்செந்தூர் செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் 3ஆவது இடம் பிடித்தார்.
திருக்குறள் போட்டியில் திருச்செந்தூர் செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் 3ஆவது இடம் பிடித்தார்.
மதுரை உலகத் திருக்குறள் பேரவை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற திருக்குறள் எழுத்துத் தேர்வில் திருச்செந்தூர் செந்தில் முருகன் நடுநிலைப் பள்ளி மாணவி மா.ஸ்ரீமதி மாநில அளவில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதையடுத்து மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனை மாணவிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகி இரா.சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் மூ.முருகேசன் உள்ளிட்டோர் பாராட்டினர்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.