முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி நாள் விழா

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:06 am IST
பகிர்:

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு,  கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமை வகித்தார்.  திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் அ. சுருளியாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
மேலும், நிகழ் கல்வியாண்டில் பணி ஓய்வுபெறும் பேராசிரியர்கள் மா.முனியசாமி, பா. ஜெயராமகிருஷ்ணராஜ் மற்றும் அலுவலர்கள் கா. ராதாகிருஷ்ணன், ஊ. பெருமாள்,  பா. நைசத்குமார், வே. மந்திரம், ச. அழகிரி,  சி. ஆறுமுகம் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி அவர் பாராட்டினார்.  மேலும், பல்கலைக்கழக அளவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்,  மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் சுபாஷினி, மா. சிவபாக்கியம்,  மா.முரளி, ராஜேஸ்வரி, பா. செந்தூர்பாண்டி, ஆ. தேவராஜ், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  தொடர்ந்து, மாணவர், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.