ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்களை கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்களை கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அஸாருதீன், பொருளாளர் நாசர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் முஹம்மது கண்டன உரையாற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர் தமீம் அன்சாரி, துணைச் செயலர்கள் சிக்கந்தர், இமாம்பரீது, மாணவரணிச் செயலர் ஷமீம், ஸ்ரீவைகுண்டம் கிளைத் தலைவர் அஸ்கர் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலர் அஸாருதீன் நன்றி கூறினார்.