காயமடைந்த பெண் சாவு
கோவில்பட்டி அருகே தீக்குளித்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோவில்பட்டி அருகே தீக்குளித்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோவில்பட்டியையடுத்த வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் ராமர், பால் வியாபாரி. இவரது மனைவி பாண்டியம்மாள்(40). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.