முகப்பு
தூத்துக்குடி

சாலை விரிவாக்கம் கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை எட்டயபுரம் சாலை சந்திப்பில் இருந்து கடம்பூர் வரை சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி பகத்சிங் மன்றத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 24 ஜூலை 2018, 12:55 am IST
பகிர்:

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை எட்டயபுரம் சாலை சந்திப்பில் இருந்து கடம்பூர் வரை சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி பகத்சிங் மன்றத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  பகத்சிங் மன்ற கோவில்பட்டி ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மன்றத்தின் ஆட்டோ தொழிற்சங்க வட்டச் செயலர் கொம்பையா தலைமை வகித்தார்.   விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீத்தாராமன், பெண்கள் பாதுகாப்புக் குழு வட்டத் தலைவர் சுந்தரி, நரிக்குறவர் சங்க மாவட்டச் செயலர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 
  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்   கோவில்பட்டி- எட்டயபுரம் சாலை- மந்தித்தோப்பு சாலை சந்திப்பில் இருந்து கடம்பூர் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்,  சாலை விரிவாக்கப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 
 இதில், டிப்பர் சங்க வட்டச் செயலர் காளிராஜ், விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் சின்னச்சாமி, மன்ற உறுப்பினர்கள் கணேசன், சேதுராமசாமி, அழகர், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments