முகப்பு
தூத்துக்குடி

போலி தீர்வை ரசீது தயாரித்தவர் கைது

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மந்தித்தோப்பு ஊராட்சியில் வீட்டுத் தீர்வை ரசீதை போலியாக தயாரித்து விநியோகித்தவரை போலீஸார்  கைது செய்தனர். 

Updated On : 24 ஜூலை 2018, 12:54 am IST
பகிர்:

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மந்தித்தோப்பு ஊராட்சியில் வீட்டுத் தீர்வை ரசீதை போலியாக தயாரித்து விநியோகித்தவரை போலீஸார்  கைது செய்தனர். 
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மந்தித்தோப்பு ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் முத்தையா மகன் பாலகுமார்(38).  இவர் தங்கள் ஊராட்சி மன்றத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு போலியாக வீட்டுத் தீர்வை ரசீதை இனாம்மணியாச்சி நியூ காலனியைச் சேர்ந்த சுப்பையா மகன் காளிமுத்து(41) என்பவர் விநியோகித்துள்ளார் என்றும்,  கடந்த ஒரு  ஆண்டாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு  காளிமுத்துவை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments