இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் லட்சியம்
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே அதிமுகவின் லட்சியம் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே அதிமுகவின் லட்சியம் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதற்காக 200 பேருக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் 20 ஆண்டு காலமாக கட்சியில் ஜெ. பேரவை மாவட்டச் செயலாளராக நான் பொறுப்பு வகித்து வருகிறேன். ஜெயலலிதாவால் முதலில் எம்.எல்.ஏ. ஆகவும், தற்போது அமைச்சராகவும் ஆகியுள்ளேன்.
நாங்கள் அதிமுகவில் பொறுப்பேற்ற பின் தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீதம் கட்சி வளர்ச்சியடைந்துள்ளது. தற்போதுகூட முதன் முதலாக நெல்லை- தூத்துக்குடி ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெற்றுள்ளோம் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.