விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டம்
கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் கதிரேசன் தலைமை வகித்தார். மக்களவைத் தொகுதிச் செயலர் ராஜ்குமார், சட்டப்பேரவைத் தொகுதிச் செயலர்கள் முருகன், குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின், மாநிலத் துணைச் செயலர் கலைவேந்தன், கட்சியின் வழக்குரைஞர் பிரிவு மாநிலத் துணைச்செயலர் பெஞ்சமின் பிராங்க்ளின், மாவட்டத் துணைச் செயலர் பாஸ்டர் மோகன், ஒன்றியச் செயலர்கள் மாடசாமி (கோவில்பட்டி), மாதவன் (விளாத்திகுளம்), சங்கர் (புதூர்), காளிதாஸ் (கயத்தாறு), நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் செய்வது, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மக்களவைத் தேர்தல் பணி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.