முகப்பு
தூத்துக்குடி

பரோலில் வந்த சிறைக்கைதி  தலைமறைவு

சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென மாயமானதால் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

Updated On : 23 ஜனவரி 2019, 5:56 am IST
பகிர்:

சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென மாயமானதால் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கச்சேரி தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகையா (45). கடந்த 1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது.  இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த சண்முகையா தனது தாயை பார்ப்பதற்காக கடந்த  15 ஆம் தேதி பரோலில் வெளியே வந்தாராம்.  21 ஆம் தேதி மாலை அவர் மீண்டும் சிறைக்கு திரும்பி இருக்க  வேண்டும் என்ற நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்குள் சிறைக்கு திரும்பாதது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
 இதையடுத்து, வழக்குப் பதிந்த ஓட்டப்பிடாரம் போலீஸார் தலைமறைவான சண்முகையாவை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.