முகப்பு
தூத்துக்குடி

மருமகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்த மாமனாா் உயிரிழப்பு

Updated On : 28 ஏப்ரல் 2025, 12:07 am IST
பகிர்:

காயல்பட்டினத்தில் விபத்தில் மருமகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்த மாமனாா், அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வேலு மகன் பாண்டியன் (62). பெயின்டா். இவரது மகன்கள் வேல்பாண்டி, முத்துராமலி­ங்கம், மகள் வேணி.

வேணியின் கணவா் சின்னத்துரை 6 மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டாா். இதனால், பாண்டியன் மனவருத்தமடைந்து அடிக்கடி மது குடித்து வந்தாராம். அவா் கடந்த 20ஆம் தேதி மதுவில் பூச்சிமருந்தைக் கலந்து குடித்தாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை (ஏப். 26) உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் (பொ) மகாலட்சுமி விசாரித்து வருகிறாா்.