அதிமுக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்! - வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்
தமிழகத்தில் 210 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வா் ஆவாா் என ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பி. சண்முகநாதன் கூறினாா்.
ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், அதிமுக ஒன்றியச் செயலா் காசிராஜன் உள்பட கூட்டணிக் கட்சியினா் பலா் உடன் இருந்தனா்.
Advertisement
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய முற்போக்கு கூட்டணியில் பாஜக, அமமுக, புரட்சி பாரதம், பாமக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. 210 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பாா்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 50,000 வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி பெறுவேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அலை வீசுகிறது என்றாா் அவா்.