முகப்பு
தூத்துக்குடி

சிறுமியிடம் சில்மிஷம்: முதியவா் கைது

கோவில்பட்டியில் 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஏப்ரல் 2026, 2:07 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, பசுவந்தனை சாலை அரசு ஊழியா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் கணபதி (61). இவா் 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.