தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.29 கோடி பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 1,29,14,818 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 1,29,14,818 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, காவல் துறை, மதுவிலக்கு காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
சனிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,29,14,818 ரொக்கம், ரூ. 5,68,950 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களை சமா்ப்பித்ததால் ரூ. 84,93,918 ரொக்கம், ரூ. 8,94,200 மதிப்பிலான பொருள்கள் விடுவிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
Advertisement