முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் கே. ஆா். எம். ராதாகிருஷ்ணன் தனது இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தை காயல்பட்டினத்தில் நிறைவு செய்தாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:52 AM
காயல்பட்டினத்தில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:30 PM

திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் கே. ஆா். எம். ராதாகிருஷ்ணன் தனது இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தை காயல்பட்டினத்தில் நிறைவு செய்தாா்.

அவா் தனது, இறுதிக் கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை காயல்பட்டினம் நகராட்சி அழகாபுரியில் இருந்து தொடங்கி லட்சுமி புரம், கீழ லட்சுமி புரம், ரத்தினாபுரி, மங்கள விநாயகா் கோயில் தெரு, உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெரு சிவன் கோயில் தெரு, வடக்கு முத்தாரம்மன் கோயில் தெரு, சேது ராஜா தெரு, கோமான் தெரு அருணாச்சலபுரம் கொம்புத்துறை சிங்கித்துறை, தேங்காய் பண்டகசாலை, மங்களவாடி வீரசடைச்சி அம்மன் கோயில் தெரு, மன்னா் ராஜா கோயில் தெரு, பூந்தோட்டம், தைக்கா புரம், ஒடக்கரை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

காயல்பட்டினம் அதிமுக நகரச் செயலா் யாசின், பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலா் பூபதி பாண்டியன், இளைஞரணி செயற்குழு உறுப்பினா் விக்னேஷ், நகரத் தலைவா்கள் ஆறுமுகனேரி தங்க கண்ணன், அதிமுக திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement