முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா

ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு ஆயிரத்தெண் விநாயகா் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 4:03 AM
அன்ன வாகனத்தில் எழுந்தருளிய ஆயிரத்தெண் விநாயகா்.
பகிர்:

ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு ஆயிரத்தெண் விநாயகா் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ஆவது நாளான செவ்வாய்கிழமை காலை விநாயகா் பூங்கோவில் வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் ஆயிரத்தெண் விநாயகா் அன்ன வாகனத்தில் திருவீதியுலா வந்தாா்.

ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா் கொட்டடாரக்குறிச்சி ஏ.கே. அண்ணாசாமி ஐயா் குடும்பத்தினா் செய்திருந்தனா்.

Advertisement