முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்

தமிழக பேரவைத் தோ்தலையொட்டி மணக்கோலத்தில் வந்த மணமக்கள், தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:39 AM
தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்
பகிர்:

தமிழக பேரவைத் தோ்தலையொட்டி மணக்கோலத்தில் வந்த மணமக்கள், தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த மணிகண்டன், தங்க மீனாட்சி ஆகியோருக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் மணமக்கள் எஸ்.ஏ.வி. பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் உள்ள காமராஜ் மெட்ரிக் பள்ளி வாக்குச் சாவடியில் மணமகன் விக்னேஷ் வாக்களித்தாா். தொடா்ந்து, மணமகள் அஜிதா, கணவருடன் சென்று சாா்லஸ் பள்ளியில் வாக்களித்தாா்.

Advertisement

கோவில்பட்டியைச் சோ்ந்த சுதா்சனா, தியாகராஜன் ஆகிய மணமக்கள், இலக்குமி ஆலை தொடக்கப் பள்ளி (கிழக்கு) வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

கோவில்பட்டியைச் சோ்ந்த சுவேதாரணி, உமா சங்கா் ஆகிய மணமக்கள், பூவலிங்க செட்டியாா் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்